Saturday, November 16, 2013

போஜராஜன் சரித்திர வரலாறு


                   சீர்பெற்றோங்கிய நெடியகடல்சூழ்ந்த சம்புத்தீவின் கண்ணளவாய் மிகுந்தோங்கிய தொண்ட மண்டலத்தைச் சார்ந்த மலைகளும், குன்றுகளும், நீர்வளம், நிலவளம் பொருந்திய சாலை சோலைகள் தாமரைத் தடாகங்கள் நந்தவனங்கள் தேவாலயம், பிரமாலயம், விஷ்ணுவாலயம் இப்பேர்க்கொத்த  விநோதங்களும் மிகுந்த கூட கோபுர மாடமளிகைச் சிங்கரமண்டபம்  விசித்திர விநோதங்களும்  வாய்ந்திலங்கா நின்ற தருமாபுரி யென்றொரு பட்டணமுண்டு அந்தப் பட்டணத்தைப் பரிபாலனஞ் செய்யா  நின்ற போஜமஹராஜ னென்றோர் இராஜன் அரசு செய்துகொண்டிருந்தான். அவன் நாண்டு வேதம் ஆறுசாஸ்திரம்  பதினென்புரானம் அறுபத்து நான்கு கலைக்கியானம் தொணநூற்று தத்துவங்கள் மநுவிக்கியான முதல் மற்ற யாவுங் குறைவில்லாமற் கற்றுணர்ந்தவனாய்ப் பிரம்ம, ஷத்தரய, வைசிய, சூத்திரராகிய இந்நான்கு வருணத்தாரும் புகளும்பதியாயக் குடிகளிடம் ஆறிலொரு கடமை வாங்கிகொண்டு மனுநெறி வழுவாமல் ஆராய்ச்சிமணி கட்டி, மந்திரி பிரதானிகள் சூழ இராஜ்ய பரிபாலனம் பண்ணிக்கொண் டிருந்தான்.



அப்படி யிருகின்ற நாளையிலே ஒருநாள் முதன் மந்திரியாகிய நீதிவாக்கியனை யழைத்து நாம் வேட்டை மார்க்கமாய்ப் போகவேண்டும். ஆனபடியால், நம்முடைய இரதகஜதுரகபதாதியாகிய நால்வகைச் சேனைகளையும் கூடப் பிரயாணப் படும்படியாய்ச் சொல்லுமென்று இராஜன் மந்திரிக்கு சொல்ல, அப்போது நீதிவாக்கிய மந்த்ரி அப்படியே நால்வகைச் சேனைகளை யெல்லாம் பிரயனப்படுத்த போஜமஹராஜன் தன்னுடைய ஆடையாபரணாலங்கிருதனாய் ஆயுத முவஸ்தீப்புடனே நால்வகைச் சேனைகள் மந்திரி பிரதானிகள் சூழப் புறப்பட்டுக் காடு, மலை, வனம், வனாந்திரமுங் கடந்து ஆரண்ணியமான காட்டிற்சென்று கரடி,புலி, சிங்கம் முதலாகிய மிருகங்களை வேட்டையாடி விடாய் கொண்டு சதுரங்க செனையுடனே தனது நகரத்தை நோக்கி  மார்க்கத்தில், சரவணப்பட்ட நெந்கின்ற ஒரு பிராமணன் கம்புக் கொல்லைக்குக் காவலாகப் பரண் கட்டிக்கொண்டு அதின் மேற் காவலிருந்தான். அப்படி யிருக்கையில்  போஜராஜனும் சேனைகளுங் கூடிக் கொல்லையருகே வருகிறபோது அககொல்லையைக் காதுக்கொண்டிருக்கிற பிராமணன் பரண்மேலிருந்து வருகின்ற சேனைகளைப் பார்த்து சொல்லுவான். ஓகோ சேனைகளே! நீங்கள் மொத்தவும் பசியாய்த் தண்ணீர் விடாய்ப்பட்டுப் போகின்றீரே, இதோ என் கம்புக் கொல்லையில் கம்புக்கதி ரிருக்கின்றது அதைப் பறித்துத் தின்னுங்கள். அது வேண்டமென்றால் வெள்ளரிக்காய் விரைத்திருக்கிறேன் அதையாவது தின்று பசியாறிப் போங்களென்று பிராமணன் சொல்ல, அந்த வார்த்தையைக் கேட்ட போஜராஜனும் சேனைகளும் நல்லதென்று கம்புக் கொல்லையிற்  புகுந்து கம்புக் கதிர்களையும் வெள்ளரிக்  காய்களையும் பறித்துத் தின்றார்கள் . அந்தச் சமயத்தில் பிராமணன் பரண்விட்டுக் கீழே யிறங்கி, ஐயோ கூ கூ வென்று கூச்சலிட்டு ஓகோ சேனைகளே! என் கம்புக் கொல்ல்லையை அழிக்கவா வந்தீர்கள். இதென்ன அநியாயம் கேள்விமுறை யில்லையோ  வென்று கூச்லிட்டான். அதைக் கேட்ட போஜராஜனும் அவன் படைகளும் பயந்து வெளியில் வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு பிராமணன் தன்னுடைய பரண்மே லேறிக்கொண்டு சேனைகளைப் சொல்லுவான். ஓகோ சேனைகளே! நீங்களேன் கம்புக் கதிரையும் வெள்ளரிக்காயையும் சாபிடமற் போகிரீறென்ன அந்த வார்த்தையைக் கேட்ட போஜமஹராஜன் தனது நீதிவாக்கிய மந்திரியை அருகிலழைத்து ஓகோ கேளாய் மந்திரி!


இக்கொல்லையை காத்திருகின்ற பிராமணன் பரண்மீதிருந்தபோ திரக்கமாகிய வார்த்தையும் பரணைவிட்டுக் கீழிரங்கியபோது  மிக்க கொடூரமாகிய வார்த்தையும் அவ்விதமாக இரண்டு வார்த்தைகள் அவனிடத்தில் உண்டாயிருபதால் எது அதிசயமாக விருக்கிறதென்று சொல்ல, நீதிவாக்கிய மந்திரி இராஜனைப் பார்த்து, ஒரு வார்த்தை சொல்லுவான்; ஆனால், கேளும் மகாராஜரே! அந்தப் பிராமண னேறியிருக்கிற  பரணின் கீழ்  ஏதாவதொரு  அதிசயமிருக்கவேண்டும் இல்லாவிடில் அவன் அப்படிச் சொல்லமாட்டான். இதை நாம் பரிசோதிக்க வேண்டும்மென்று சொல்ல, அப்போது போஜ மகாராஜன் பிராமணனை யழைத்து, ஓ பிராமணரே! உமது கம்புக் கொல்லையை நாங்களழித்ததாகக் கூக்குரலிட்டீரே நல்லது  இருக்கட்டும். நாங்கள் உன் கொல்லைக்குப் பதில் கொல்லையும், சில கிராமங்களும் வெகுமானமாகக் கொடுக்கிறோம். ஆதலால் , இந்தக் கொல்லையை எனக்கு கொடுக்கச் சம்மதமோவென்று கேட்க , அப்போது சரவணப்பட்டனென்கிற பிராமணன் சொல்லுவான். ஓகோ மகாராஜனே! தாங்கள் என்னை ஒரு பொருட்டாக யெண்ணிக் கம்பு கொல்லையை கேட்கிறபடியால் உங்களுக்கு த்தடை சொல்லக்கூடாது. நல்லது, அப்படியே கொடுக்கிறேன்னென்று  சம்மதிக்க, போஜராஜன் பிராமணனுக்கு சில கிராமங்களுஞ் சில பொருள்களுங் கொடுத்து அந்தக் கொல்லையைத்  தமக்குச் சொந்தம்மாக்கிக்கொண்டு  சிலபேர் ஒட்டர்களைவிட்டு அந்தப் பரன்கீழே வெட்டிப் பரிசோதிக்கும்படியாய்ச் சொல்ல அப்படியே ஒட்டர்கள் மண் வெட்டிக்கொண்டு வெட்டிச் சோதிக்கும்போது, அதிலே நவரெத்தின கசிதமான பொற்பீடங்கள் அமைத்து முப்பத்திரண்டு படிகளுடன் முப்பத்திரண்டு பதுமைகளுஞ் சூழப் பிரகாசம் பொருந்திய நவரெத்தின சிங்காதனமொன்றிருந்தது   





அதைக்  கண்டு போசராஜனும் நீதிவாக்கிய மந்திரியும் சகல சேனைகளும் சந்தோசமடைந்து தமது நகரத்திற்கு கொண்டுபோக வேண்டுமென்று கருதிச் சேனைகள் சூழத் தருமாபுரியைச் சேர்ந்து தம் சிங்காரமண்டபத்தில் இந்தச் சிங்காதனத்தை நிறுத்தி அந்த சிங்கதனதில் போஜராஜன் வீற்றிரிகும்படியாய் ஏவலாளர்களால் சுத்தி செய்து நான்கு வேதங்கலுணர்ந்த வேத வேதியர் யாசககர்தாகள் வித்துவான்கள் ஜோதிடநூலோர் இவர்கலெலாரையும் வரவழைத்து நல்ல சுபமுகூர்த்தத்தில் 

Friday, November 15, 2013

விக்ரமாதித்தன் கதை

                                           விநாயகர் துதி
                                                வெண்பா

புயல்மேவு கின்றவற்ற பொங்கு கடல்சூழ்
நயவுச்சினி மாகாளி நாடன் - ஜெயமேவும்
விக்ரமா தித்தன் கதை விளம்பக்
கைகரியமு கன்சரணங் காப்பு.

Sunday, October 27, 2013

இச்சரித்திரம் மியற்றி அச்சிட்டவர்கருத்து

1-வது, இவ்வுலகின் கண் மாக்ஷிமை தங்கிய நேயர்களே ! ஆதியில் சீருஞ் சிரபுமுள்ள விக்ரமாதித்தன்  பட்டி என்பவர் பூர்விக சரித்திர முதலிய யாவும், அவர்கள் இரா ஜரீயஞ்ச் செய்கையில்  தேவேந்திரனார் கொடுக்கப்பட்ட ஆயிரத்தேன் மாற்ற்றுடைய நவரெத்தின கசிதமுள்ள முப்பத்திரண்டு பிரதமை சூழ்நத சிங்காதனதைபெற்று பிரமகுலமாகிய வேதாளத்தையே வாகனமாக்கிகொண்டு மேற்சொல்லிய சிங்காதனத்தில்(2000) வருடம் காடாருமதம் வீடாருமதம் அரசு செய்திருந்தா ரல்லவா?

2-வது, மேலும் அச் சிங்கதனதிளிருந்து பின்பு சாலிவாகனனால் உயிரிழந்து கைலாயபதவி   யடைந்து பின்னர் அச் சிங்காதனம் பூமியிலழுந்தி  மண்மேடிட்டு சிலகாலஞ் சென்ற பின்பு வீரசூரதீர பராக்கிரமகிய போஜமஹரஜனுடைய மந்திரியால வெளியரங்கமாயிற்றல்லவா ?

3-வது, அந்த சிங்காதனத்தின் பிரதமைகளால் விக்கிரமாதித்தன் பட்டி இவர்களுடைய வல்லபங்களையும் துர்ப்பலங்களையும்  போஜமஹராஜனுக்கு மணிப்பிரதமைகள் வாய்மொழி கூற, அவ் வாகியார்த்தங்க்களை மஹா மகத்துவம் பொருந்திய ஜீவகாருண்ணியமுடைய தபோதனர்கள் முனிவர்கள் ரிஷிகளாகிய எவர்கள் சம்ஸ்கிருத வாகியங்களாய்ச் செய்திருந்தார்க ளல்லவா ?

4-வது, அந்த சம்ஸ்கிருத வாக்கியங்களைச் சில பெரியோர்கள் தமிழ்பதம் பிரித்து வசனரூபமாக மொழி பெயர்திருந்ததை இங்ஙனம் சிற்றறிவுடைய சிறியேன் மேற்படி பிரதிகளை பார்வையிட்டதில் அவ் வாகியார்த்த பதங்களில் சில வசனங்கள் ஒன்றோடொன்று ஒவ்வாமலும், பதம் பொருந்தாமலும், கதையலங்கரம் நீங்கியும், சரித்திரம் வேறுபட்டு மிருந்தன.

5-வது, மேற்சொல்லிய சரிதிராலங்காரத்தை யாவரும் எளிதிலுனரும் பொருட்டுச் சொல் லங்காரமாகவும் பொருட்பதம் பிரித்து சகலரும் ஆனந்த மகிழ்ச்சி யடையும்படி நூதன விசேஷமான வாகியார்தங்களை மித்திரமின்றிச் சித்திரவிச்சித்திரமாக நிர்ணயத்திருக்கின்றேன்  . அல்லாமலும், மேற்கூறிய சரித்திரத்தை வாசித்துப் பார்த்தவர்கள்  இக் கருத்தை எளிதி லுணர்வார்கலென்று முழுதும் நம்புகிறேன்.

6-வது, என் வருந்தால் விண்ணப்பமாவது: கனம் பொறுந்திய  சிநேகிதர்களே! எதற்கு முன்னம் அச்சிட்டிருக்கிற முப்பத்திரண்டு பதுமை கதையொன்று வழங்கி வருகிற சரித்திரத்தில் வேதாளத்தை (24-ம்) அதில் பதுமை கதைகளும் விக்ரமாதித்தன் பட்டி யென்பவர்களின் சங்கதியில்லாமல் ஒருவாராக முற்காலதுச் சரித்திரத்தையும் நீக்கி இக்காலத்துச் சரித்திரத்தையும் போக்கி அச்சிட்டிருக்கிறார்க ளல்லவா ?

7-வது, மேற்சொல்லிய சரித்திரத்தில் போஜமஹராஜாவின் ஜீவிய சரித்திரம் ஊர்பதி யில்லாமல்  தாறுமாறாய் கதைகேட்டு ஒருவாறாகப் பேர்மாத்திர மிருப்பதால் மற்ற சரித்திரங்களிலே மரபு முறைமை தெரியாமல் மநுநீதி சரித்திரங்கள் இரண்டு விக்கிரமாதித்த னென்கிற இயற்பேருடைய கதை யியற்றி மாறாகக் கூறலாலும் மேற்கூறிய விக்ரமாதித்தன் பூர்விகச் சரித்திர வரலாறும் முப்பத்திரண்டு பதுமைகள் சொல்லிய ஜீவிய சரிதிரவரலாறும், ஆதியோடந்தமாகப் பார்வை யிட்டவர்க்கு இதினுணுக்கம் கூடியவரையில் எளிதில் உணர்வார்களென்று பெரும்பாலும் நம்புகிறேன்.

8-வது , இப்போது யானியற்ற்ய கதையும் முன்னம் அச்சிட்ட கதையும் ஒன்றோடொன்று ஒற்றுப பார்த்தால் சரித்திர வித்தியாசங்களை எளிதிலறியலாம். அன்றியும், இவ்வுலகில் விக்கிரமாதித்த மகாராஜா நாள் தொடங்கி இதுபரியந்தம் அரசகஷிசெய்த இராஜாக்களிற் எவ்வளவோ சக்கரவர்த்தி மநுநீதி செலுத்தி இருப்பார்கள். அவர்களில் நளன், அரிச்சந்திரன், புரூரவச்சிக்கரவர்த்தி, மடாதிபதி, கிரீடாதிபதி முதலிய பூர்விக ராஜர்களும் இப்போதுள்ள ராஜர்களும் அநேகர் இருந்தார்கள்ளவா?

9-வது, அன்றியும் மேற்சொல்லிய ராஜாக்களில் இவரைபோல் செளரியமும், பராக்கிரமும், கீர்த்தியும், உதாரதிறமும், முப்பதிறண்டரமும், செங்கோல் முறைமையும் மநுநீதிவழுவாமல் அரசு செலுத்திய மன்னர்களில்லையென்று சொல்லலாம், மேலும் பதிநேன்பாஷைகளில் அரபி, இந்துஸ்தான், இங்கிலீஷ், தெலுங்கு, தமிழ், பாரிசு இப்பாஷைகளிலும், இப்பேர்ப்பட நேர்த்தியான செவிக்கின்பமுள்ள சரித்திரங்களை நாம் கண்டறிய மாட்டோம். கருத்தாளிகளின்  இதினுடைய நுட்பதயை கண்டறியகூடும்.

10-வது, சிறியேன் எவ்வளவோ கஷ்டப்பட்டு எந்த சரித்திரத்தை எயாற்றி அச்சிடத் துணிந்தேன். எதில் பெரும்பாலும் எழுதுக்குற்றம், சொற்குற்றம், பொருட்குற்றம் மிருப்ப்னும் பெரியோர்கள் மனம் பொறுத் தங்கீ கரிப்பார்களாக.

From Muthu - I am trying my best to put it as it is. Again, if there is any mistake. please let me know. we will fxi it.

விக்ரமாதித்ன் கதைகள்

ஒரு பழைய புத்தகத்தை கண்டு எடுத்தேன், வீடு வர்ணம் பூசுகயில். அதை அனைவருக்கும்  வழங்க வேண்டும் என்ற ஆவல் .